போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, உலகளவில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பைகளையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் 900 கோல்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்தார்.
ரொனால்டோவுக்கும் அவரது காதலி ஜியார்ஜினாவுக்கும் 5 குழந்தைகள் இருந்தபோதும் இதுவரை அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இது சம்மந்தமாக ஜியார்ஜினாவுக்கு திருமணத்துக்காக விலையுயர்ந்த வைரமோதிரம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் ரொனால்டோ. 12 கேரட் மதிப்புள்ள அந்த வைர மோதிரத்தின் விலை இந்திய மதிப்பில் 25 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது.