Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய இலங்கை முன்னாள் கேப்டன்

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (18:53 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடியதை இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககாரா பாராட்டியுள்ளார்.


 

 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஒருநாள் போட்டி தொடர் முழுவதும் ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதி போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிக்ஸர் மழை பொழிந்தார்.
 
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் 5வது இடத்தை பிடித்தார். இவரது சிறப்பான ஆட்டம் குறித்து இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
ரோகித் சர்மா நாளுக்கு நாள் சிறப்பாக விளையாடி வருகிறார். அதேசமயம் அவருடைய ஆட்டம் அழகான ஸ்டைலிலும், தாக்குதலாகவும் உள்ளது. 
 
இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.
 
ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இதுவரை 14 சதங்களை விளாசியுள்ளார். இதில் 6 சதங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் ரோகித் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments