Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கில், ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம்.. வலுவான ஸ்கோரை நோக்கி இந்திய அணி..!

கில், ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம்.. வலுவான ஸ்கோரை நோக்கி இந்திய அணி..!
, ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (15:30 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் இருவருமே அரை சதம் அடித்துள்ள நிலையில் இந்தியா வலுவான ஸ்கோரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றதை அடுத்து அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணியின் களத்தில் இறங்கியது.
 
ருத்ராஜ் மற்றும்  சுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில் ருத்ராஜ் 8 ரன்களில் அவுட்டானார்.  இதனை அடுத்து தற்போது கில் 67 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 55 ரன்களும் எடுத்து வலுவான நிலையில் உள்ளனர். 
 
இந்திய அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டாவது ஒருநாள் போட்டியில் புகுந்த மழை! இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி தாமதம்!