இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் விராட் கோலி ராய்ப்பூரில் அபாரமாக சதமடித்தார். முதல் போட்டியில் 135 ரன்கள் எடுத்திருந்த அவர், இரண்டாவது போட்டியில் 93 பந்துகளில் 102 ரன்கள் குவித்து, கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சதத்தின் மூலம், கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 3-வது இடத்தில் பேட்டிங் செய்து 46 சதங்கள் அடித்துள்ளார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக சச்சின் டெண்டுல்கர் அடித்த 45 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் எந்த ஒரு வடிவத்திலும், ஒரே பேட்டிங் நிலையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
கோலியின் எதிர்காலம் குறித்து பேசிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி, கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள், தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால், 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை அவர்களால் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர்கள் அணிக்கு தொடர்ந்து பங்களிக்கும் வரை வயது என்பது ஒரு எண் மட்டுமே என்று அவர் கூறினார்.