Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடைசி நாளில் 381 ரன்கள் இலக்கு… இந்தியா பாயுமா? பம்முமா?

கடைசி நாளில் 381 ரன்கள் இலக்கு… இந்தியா பாயுமா? பம்முமா?
, திங்கள், 8 பிப்ரவரி 2021 (19:08 IST)
இந்திய அணி நாளை கடைசி நாளில் 381 ரன்களை துரத்த வேண்டியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வரும்  முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது 578 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி பாலோ ஆன் ஆனாலும் இங்கிலாந்து அணியே தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்தது. முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியுள்ளது. இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் அற்புதமாக பந்து வீசி 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஆட்டமுடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை சேர்த்துள்ளது. நாளை ஐந்தாம் நாளில் வெற்றிக்கு 381 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸியை பந்தாடியது போல பாயுமா அல்லது டிரா செய்ய போராடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021- பிபிசி இந்திய வீராங்கனை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியீடு