Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2019 வரை விளையாட விரும்புகிறேன்: கிரிக்கெட் வீரரின் ஓய்வு குறித்த பதில்...

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (17:48 IST)
36 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ஓய்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதோடு இந்திய அணியின் ஆதிக்கத்தை பற்றியும் பேசியுள்ளார்.
 
லாரஸ் விருது வழங்கும் விழாவில் யுவராஜ் சிங் கூறியதாவது, ஏப்ரல் மாதம் துவங்க உள்ள ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்த தொடர் எனக்கு மிகவும் முக்கியமானதாகும். 
 
தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது. கேப்டனாக விராட் கோலி அணியை சிறப்பாக வழி நடத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். 
 
வெளிநாடு சென்று 3 தொடர்களில் இரண்டை வென்றுள்ளது இந்திய அணியின் ஆதிக்கத்தையே காட்டுகிறது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்த முடியும் என நம்பிக்கை இதன் மூலம் கிடைத்துள்லது. இது நல்ல துவக்கமாகும். 
 
மேலும், நான் 2019 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அதன் பிறகே ஓய்வு குறித்து முடிவு செய்வேன். தற்போதைக்கு ஓய்வு குறித்து எந்த வித யோசனையும் இல்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments