Publish Date: Tue, 18 Apr 2023 (12:21 IST)
Updated Date: Tue, 18 Apr 2023 (18:23 IST)
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 40 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படத்தில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை த்ரிஷா திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றது ஏன் திரிஷாவின் அம்மாவிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், உண்மையை சொல்லப்போனால் வருண் மிகவும் நல்ல மனிதர் தான். அவர் த்ரிஷா சினிமாவில் நடிக்கிறார் என தெரிஞ்சும் திருமணத்திற்கு பின்னரும் நடிக்கலாம் என கூறினார். அத்தோடு திரிஷாவை தோழி சார்ந்து நிறைய encourage செய்திருக்கிறார். சில பெரியவர்கள் சேர்ந்து gossips பேசியதும், சில நிபந்தனைகளை விதித்து திருமணத்திற்கு பின்னர் அப்படித்தான் தான் இருக்கவேண்டும் என கட்டாயப்படுத்தியதால் சரிப்பட்டு வரல.
அதனால திருமணம் நின்றுவிட்டது. எனவே ஒத்து வராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டு வாழுறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. சில விஷயம் நமக்கு சரிப்பட்டு வரல என்றால் பிரிந்து விடுவது தான் பெட்டர் என கூறினார்.