Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல்' பேனர் விழுந்ததால் ஒரு குடும்பத்திற்கே காயம்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (16:19 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் இரண்டாவது வாரத்திற்கான பேனர் கட்டிவிட்டு சென்ற கேரள ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் என்ற செய்தி கடந்த வாரம் வெளிவந்தது. இந்த நிலையில் மெர்சல் பேனர் விழுந்ததால் இன்று ஒரு குடும்பத்திற்கே காயம் ஏற்பட்டுள்ளது



 
 
சென்னை அருகேயுள்ள திருப்போரூரில் மெர்சல் படத்தின் 30 அடி பேனர் ஒன்றை விஜய் ரசிகர்கள் வைத்திருந்தனர். இந்த பேனர் சரியாக பொருத்தப்படாததால் இன்று திடீரென சரிந்தது. அப்போது அந்த வழியாக போய்க்கொண்டிருந்த காரின் மீது பேனர் விழுந்தது. இதனால் அந்த காரில் பயணம் செய்த தேவநாதன் என்பவரது குடும்பத்தினர்களுக்கு காயம் ஏற்பட்டது.
 
இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட புகார் குறித்து செங்கல்பட்டு துணை ஆட்சியர் ஜெயசீலன் கூறியபோது ''அப்பகுதியில் பேனர் வைக்க நாங்கள் அனுமதி அளிக்கவில்லை. இது அங்கீகரிக்கப்படாதது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார். பேனர் வைத்த விஜய் ரசிகர்கள் யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் தெரிகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments