Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்னியின் செல்வன் மூன்றாவது சிங்கிள் எப்போ? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான்

பொன்னியின் செல்வன் மூன்றாவது சிங்கிள் எப்போ? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான்
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:31 IST)
கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பலராலும் விரும்பிக் கேட்கப்படும் ஒரு பாடலாக அமைந்துள்ளது. இதையடுத்து இரண்டாவது சிங்கிள் பாடலாக ‘சோழா சோழா’ பாடல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து மூன்றாவது பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என ரஹ்மான் இப்போது தெரிவித்துள்ளார். டிவிட்டரில் ரசிகர் ஒருவர் “ஸ்ரேயா கோஷல் பாடிய பாடலை சீக்கிரம் வெளியிடுங்கள்’ என ரஹ்மானை டேக் செய்து டிவீட் செய்திருந்தார். அவருக்கு பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான் ‘செப்டம்பர் முதல் வாரம் வரை காத்திருங்கள்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல் ஹாலிவுட் நடிகையை சந்தித்த கமல்… கூட இருப்பவர் யாருன்னு தெரியுமா?