Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூன்று சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்தில் அடுத்தடுத்து நடிக்கும் கார்த்தி!

மூன்று சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்தில் அடுத்தடுத்து நடிக்கும் கார்த்தி!

vinoth

, புதன், 10 ஏப்ரல் 2024 (07:19 IST)
ஜப்பான் படத்தை முடித்த நடிகர் கார்த்தி அடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியாரே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.அந்த படத்தின் ஷூட்டிங் பாதியளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அவர் இயக்குனர் பிரேம் குமார் இயக்கும் ‘மெய்யழகன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த கார்த்தி இப்போது மீண்டும் நலன் இயக்கும் ‘வா வாத்தியாரே’ ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த படத்துக்குப் பின்னர் அவர் தன்னுடைய ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். முதலில் சர்தார் 2 படத்திலும், அதன் பின்னர் கைதி 2 மற்றும் தீரன் அதிகாரம் 2 ஆகிய படங்களிலும் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அவர் டாணாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் படம் முதல் நாளிலேயே 150 கோடி வசூலிக்கும்… இயக்குனர் சந்தீப் ரெட்டி நம்பிக்கை!