Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை டூ கோத்தகிரி : நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டார்!

Webdunia
புதன், 13 மே 2020 (12:01 IST)
கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவி அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் ராதாரவி. சமீபத்தில் திமுகவிலிருந்து விலகிய இவர் தமிழக பாஜகவில் இணைந்தார். கடந்த 10ம் தேதியன்று சென்னையிலிருந்து கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார் ராதாரவி.

இதுகுறித்து அறிந்த கோத்தகிரி சுகாதார அதிகாரிகள் ராதாரவியின் பங்களாவுக்கு சென்று விசாரித்ததில் அவர் உரிய அனுமதி பெற்ற பிறகே சென்னையிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. பிறகு அவரது பங்களாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பிறகு அவர்கள் பங்களாவில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments