Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது இடத்தில் சால்வை அணிவித்தது அவரது தவறு: நடிகர் சிவக்குமார்

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (18:37 IST)
நடிகர் சிவகுமார் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு முதியவர் ஒருவர் சால்வை அணிய வந்தார். நடிகர் சிவகுமார் அந்த சால்வையை பிடுங்கி தூக்கி எறிந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. 
 
ஏற்கனவே நடிகர் சிவகுமார் ஒரு இளைஞரின் செல்ஃபோனை தூக்கி எறிந்து அதன் பின் அவர் வருத்தம் தெரிவித்ததோடு அந்த இளைஞருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தார். 
 
இந்த நிலையில் நேற்று ஒரு முதியவரின் வயதுக்கு கூட மதிப்பு தராமல் அவர் அணிய வந்த சால்வையை பிடுங்கி தூக்கி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
காரைக்குடி நிகழ்ச்சியில் சால்வையை தூக்கியெறிந்த நிகழ்வுக்கு வருத்தம்  தெரிவித்து கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் எனக்கு பிடிக்காது என தெரிந்ததும் பொது இடத்தில் சால்வை அணிவித்தது அவரது  தவறு தான். மேலும் 
பொது இடத்தில் சால்வை வாங்கி தூக்கியெறிந்தது எனது தவறு; அதற்கு Sorry கேட்டு கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments