Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு சகோதரியாக நடித்த பிரபல நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (21:18 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாண்டியன்' திரைப்படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்த ஜெயசுதா, பல படங்களில் நாயகியாகவும் குணசித்திர நடிகையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது கணவரும் பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் சகோதருமான நிதின்கபூர் சற்றுமுன்னர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



 


1995ஆம் ஆண்டு ஜெயசுதா-நிதின்கபூர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷ்ரேயன், நிஹர் என்ற இருமகன்கள் உள்ளனர். பிரபல தயாரிப்பாளரான நிதின்கபூர் சமீபத்தில் தனது மகன் ஷ்ரேயன் நடித்த ஒரு படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது.

இந்த படம் உள்பட அவர் தயாரித்த வேறுசில படங்களும் தோல்வியை தழுவியதால் கடும் நிதி நெருக்கடி காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. நிதின்கபூரின் இறுதிச்சடங்கு மும்பையில் நாளை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments