Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமேல் அதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன்… அனுபமா பரமேஸ்வரன் புது முடிவு!

Advertiesment
அனுபமா பரமேஸ்வரன்

vinoth

, திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (08:08 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. மாறாக தெலுங்கு சினிமா உலகம் அவரை  கைநீட்டி அழைத்துக் கொண்டது. அங்கு பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கார்த்திகேயா 2 திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்த ஆண்டு அவர் ‘தில்லு ஸ்கொயர்’ என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றாலும் அனுபமா மேல் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அதுபற்றி பேசியுள்ள அனுபமா “அந்த படத்தில் நடித்ததால் எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இனிமேல் அது போன்ற வேடங்களில் நான் நடிக்க மாட்டேன். அந்த கதைக்கு அது தேவைப்பட்டதால் கிளாமராக நடித்தேன். ஆனால் அது என்னுடைய உண்மையான குணத்துக்கு எதிராக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘மஞ்சும்மள் பாய்ஸ்’ இயக்குனர் சிதம்பரத்தின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு!