Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் விளக்கம்

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (20:22 IST)
.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி  நேற்று நடைபெற்ற நிலையில், இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி   பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்  விளக்கம் அளித்திருந்தார்.

அதில், '' நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு   பொறுப்பேற்க்கிறேன். நேற்று நடந்த சம்பவங்களால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். கலை மற்றும் கலாச்சார நிகழ்வுக்கு ஏற்றபடி வரும் காலங்களில் சென்னை மாநகரம்  மாற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள இன்று நான் பலிகடா ஆகிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  இன்று இரவுக்குள் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் தெரிவிக்கப்படும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்ற நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், நடந்தது என்ன என்பது குறித்து, இன்றிரவுக்குள் விளக்கம் அளிக்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் கூறியதாவது: ‘’ரசிகர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் ஏற்பட்ட குழப்பம் தான் அத்தனைக்கும் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து வைத்திருந்த நிலையில்,  நிகழ்ச்சி  நடந்த இடத்தில், ஒரே பகுதியில் அத்தனை பேரும் குவிந்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் 35 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்தோம்.  5ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாகத் தரப்பட்டது; நிகழ்ச்சிக்கு உள்ளே வரமுடியாதவர்கள் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் எனவும்,  நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்’’ என்று  என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments