Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்காக பாகுபலி டீமை களம் இறக்கிய ரஞ்சித்...

Webdunia
திங்கள், 15 மே 2017 (15:36 IST)
பாகுபலி2 படத்தில் அசத்திய கிராபிக்ஸ் குழு அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்த படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.


 

 
பாகுபலி2 படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, பீட்டே ட்ராப்பர் தலைமையிலான வி.எப்.எக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்களின் குழுதான். இதே குழு அடுத்த ரஜினி 161 படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய ஹாட் நியூஸ்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த பீட்டே, ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் நாங்கள் பணிபுரிகிறோம். நான் சமீபத்தில் ரஜினி படத்திற்காக மும்பையை போலவே சென்னையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கைப் பார்த்து அசந்து போனேன். பாகுபலி படத்திற்கு பின் நாங்கள் பணிபுரியும் அடுத்த படம் இது. எனவே, எங்கள் குழு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்” என அவர் கூறியுள்ளார்.

ஆனால், இயல்பான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பவர் ரஞ்சித். எனவே, இவர் படத்தில் கிராபிக்ஸ்-ஸிற்கு என்ன வேலை இருக்கிறது எனத் தெரியவில்லை. அதுவும் பாகுபலியில் வேலை செய்த குழுவை இறக்கியிருக்கிறார்கள் எனில், இது வேறு மாதிரியான படமாக அமைந்து ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் எனத் தெரிகிறது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ம் தேதி தொடங்கவுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments