Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (17:33 IST)
பூமி படத்தின் கதை திருட்டு சம்மந்தமாக ஆனந்த் என்பவர் மூலமாகதான் இந்த கதை திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தற்போது விசாரணை செய்து வருகிறார். உதவி இயக்குனரின் கதையை முழுமையாக படித்த இயக்குனர் பாக்யராஜ், பூமி படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் ‘பூமி’ படத்தின் ஸ்கிரிப்ட் முழுவதையும் கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே தன்னால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த பஞ்சாயத்தை விசாரித்த கதாசிரியர்கள் சங்கம் இப்போது உதவி இயக்குனர் கார்த்தியின் புகார் உண்மைதான் என்று கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து இந்த கதை கார்த்தியின் கதை என சங்கத்தின் உறுப்பினர்க்ள் 9 பேர் கையெழுத்திட்டு கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் கார்த்திக்கு நியாயம் கிடைப்பதற்கானா வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. இதனால் கார்த்திக்கு ஒரு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் டைட்டில் கார்டில் அவர் பெயர் இடம்பெறும் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த கதை திருட்டு சம்பவத்தில் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வாக ஆனந்த் என்பவரிடம் தான் தன் கதையை அந்த உதவி இயக்குனர் கொடுத்துள்ளார். அவர் ஜெயம் ரவிக்கு நெருங்கிய நண்பர் மற்றும் உறவினர் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அவரிடம் விசாரணை நடத்திய போது தனக்கோ ஜெயம் ரவிக்கோ தமிழ் படிக்க தெரியாது என சொல்லி உள்ளாராம். இதன் மூலம் அவர் சொல்ல வருவது தங்கள் மூலம் இந்த கதை திருட்டு நடக்க வில்லை என்பதுதானாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments