Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தை பாதித்த 2 பேரின் மரணம்! ஓ.. இதனால் தான் இந்த முடிவா?

Sinoj
வெள்ளி, 8 மார்ச் 2024 (22:32 IST)
அஜித் உடனடியாக அறுவைச் செய்துகொள்ள அவருக்கு நெருக்கமான 2 பேரின் மரணம்கூட காரணமாக்  இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
நடிகர் அஜித்தின் நெருங்கிய நட்பு வட்டாரத்தை சேர்ந்த ஆர்ட் இயக்குநர் மிலன் மரணமும்,  சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் மரணமும் அஜித்தை பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது.
 
அதிலும் ஷுட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது  விடாமுயற்சி ஆர்ட் டைரக்டர் மிலன், நடிகர் அஜித்திற்கு கால் செய்துள்ளார்.
 
ஷூட்டிங்கு தான் வர முக்கால் மணி நேரம் ஆகும் என்று கூறியுள்ளார். அடுத்து, அஜித்தே அவருக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்கவில்லை. பிறகு மிலனின் உதவியாளர் அஜித்திற்கு  போன் செய்து அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அஜித் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
 
அதன்பின்,  அங்கிருந்த சூழல்களை சமாளித்துத்தான் அவர் மிலனின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
 
அதன்பிறகு வெற்றியின் மரணமும் அஜித்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் அஜித் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என  ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
 
இந்த நிலையில், அஜித்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை  நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், நடிகர் அஜித்திற்கு, காதுக்கும் மூளைக்கும்  இடையே நரம்பில் சிறிய கட்டி ( வீக்கம்) இருப்பது கண்டறியப்பட்டது அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.  அஜித் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அஜித் தற்போது நலமுடன் இருக்கிறார். இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments