Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் களத்தில் இறங்கும் அன்புச்செழியன்.,. முன்னணி ஹீரோக்களை வைத்து 5 படங்கள்!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:37 IST)
பிரபல பைனான்சியர் அன்புச் செழியன் இப்போது மீண்டும் படத்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளார்.

சினிமா பைனான்சியராக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் அன்புச் செழியன். ஒரு கட்டத்தில் அவர் கோபுரம் பிலிம்ஸ் சார்பாக சொந்தமாக படங்களைக் கூட தயாரிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் படத்தயாரிப்பை நிறுத்திவிட்டு பைனான்ஸ் மற்றும் விநியோகம் ஆகிய பணிகளை மட்டுமே மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளார். வரிசையாக அடுத்து ஐந்து படங்களைத் தயாரிக்க உள்ளார். அந்த படங்களில் இரண்டில் சந்தானம் கதாநாயகனாகவும், ஒரு படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments