Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் முகாமிட்ட தனுஷ் அண்ட் கோ!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (16:34 IST)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக D 43 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஏற்கனவே 3 பாடல்கள் உருவாக்கப்பட்டு விட்டன. சமுத்திரக்கனி மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கி நடந்தன.

ஆனால் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக மூன்று மாதம் அமெரிக்காவில் முகாமிட்டார். அதை முடித்துவிட்டு இப்போது இந்தியாவுக்கு வந்துள்ள தனுஷ் இன்று முதல் கார்த்திக் நரேன் படத்தில் நடிக்க மும்பைக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் இறுதிக் கட்ட படப்பிடிப்போடு மொத்த காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிய உள்ளது. அதன் பின்னர் செல்வராகவன் படத்தில் நடிக்க தனுஷ் செல்ல உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments