Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தொடங்கிய நானே வருவேன் படப்பிடிப்பு!

மீண்டும் தொடங்கிய நானே வருவேன் படப்பிடிப்பு!
, புதன், 9 பிப்ரவரி 2022 (10:07 IST)
தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய நால்வர் கூட்டணி புதுப்பேட்டை திரைப்படத்துக்கு பின்னர் நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷ், யோகி பாபு மற்றும் இந்துஜா ஆகியவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை செல்வராகவன் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இரண்டு கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து ஒரு சிறு இடைவேளை கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த இடைவேளையில் தனுஷ் தனது தெலுங்கு படமான வாத்தியில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் நேற்று இன்று நானே வருவேன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடிவேலு படத்தில் இணைந்த பிரபுதேவா… கோடி ரூபாய் சம்பளத்தோடு!