Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு நாள் ரஜினியாக கண் விழித்தால் என்ன செய்வீர்கள்? தனுஷ் சொன்ன பதில்!

ஒரு நாள் ரஜினியாக கண் விழித்தால் என்ன செய்வீர்கள்? தனுஷ் சொன்ன பதில்!
, செவ்வாய், 28 டிசம்பர் 2021 (09:33 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அத்ராங்கி ரே திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனுஷ் நடித்த ராஞ்சனா மற்றும் ஷமிதாப் ஆகிய படங்கள் இந்தியில் அவருக்கு நல்ல கவனத்தைப் பெற்று தந்தன. இதையடுத்து சில வருட இடைவெளிக்குப் பின்னர் அவர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ராங்கி ரே (தமிழில் – கலாட்டா கல்யாணம்) படத்தில் நடித்தார். இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக அவர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ‘ஒருநாள் நீங்கள் ரஜினிகாந்தாக கண் விழித்தால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேட்டபோது ‘பெரிதாக எதையும் செய்யமாட்டேன். அவரைப் போலவே எளிமையாக நடந்துகொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யிடம் கதை சொல்ல சென்று சொதப்பிவிட்டேன்: எச்.வினோத் பேட்டி!