Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த நடிகை

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (13:56 IST)
நடிகை காயத்ரி, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.

 

 

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி. முதல் படத்திலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர், ‘மெல்லிசை’ என்ற படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம், ‘புரியாத புதிர்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் காயத்ரி.

அறிமுக இயக்குனரான ஆறுமுக குமாரின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில், காயத்ரியும் இணைந்துள்ளார். பழங்குடி மக்களின் தலைவனாக இந்தப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, 8 கேரக்டர்களில் நடிக்கிறார். “கோதாவரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுவரைக்கும் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாது. இனிமேலும் இப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைக்குமா என்றும் தெரியாது. எனக்கு இந்தப் படத்தில் யாரும் ஜோடி கிடையாது” என்கிறார் காயத்ரி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"தில் ராஜா" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது… லாபட்டா லேடீஸ் தயாரிப்பாளர் அமீர்கான் மகிழ்ச்சி!

என்கவுண்ட்டருக்கு ஆதரவான படமா ரஜினியின் ‘வேட்டையன்’… டிரைலர் கிளப்பிய சர்ச்சை!

ஆள் அடையாளமே தெரியல… கரகாட்டகாரன் கனகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்!

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments