Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசைஞானி இளையராஜாவுக்கு நாட்டின் 2வது பெரிய விருது அறிவிப்பு

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (22:15 IST)
தமிழ்த்திரையுலகில் அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து கின்னஸ் சாதனை செய்துள்ள நிலையில் இன்று அவருக்கு இந்தியாவின் 2வது உயரிய விருதான 'பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே கடந்த 2010ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜாவுக்கு நாட்டின் 3வது உயரிய விருதான 'பத்மபூஷன் விருதினை அளித்து மத்திய அரசு கெளரவித்த நிலையில் தற்போது பத்மவிபூஷன் விருதை அளித்துள்ளது.

இந்த விருது அறிவிப்பு குறித்த தகவல் அறிந்தவுடன் இளையராஜா கூறியபோது, 'இந்த விருதை மத்திய அரசு எனக்கு கொடுத்து கெளரவித்ததாக நான் நினைக்கவில்லை. தமிழகத்தையும் தமிழக மக்களையும் கெளரவித்ததாக நினைக்கின்றேன்' என்று கூறினார். பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானிக்கு எங்களது வாழ்த்துக்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments