Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் படத்தில் விஜய்யின் பஞ்ச் டயலாக் பற்றி அட்லீ ஓப்பன் டாக்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (11:22 IST)
மெர்சல் படம் வெளியாக இன்னும் இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. தமிழகம் முழுவதும் மெர்சல் படத்திற்காக ரசிகர்கள்  பேனர், போஸ்ட்டர் என வைத்து கொண்டாடி வருகின்றனர். விஜய்யை வித்தியாசமான 3 கெட்டப்புகளில் பார்க்க ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் படம் ரிலீஸாவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

 
இந்நிலையில் மெர்சல் படத்தைப் பற்றி அட்லீ பேசிகையில், மதுரையிலுள்ள அழகான கிராமம்தான் கதைக்களம். தெறியைத் தொடர்ந்து விஜய்க்காக எழுதிய முழுமையான கதை இது. அரசியல் படம் கிடையாது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக உருவாகியுள்ளது. 
 
கிராம தலைவராக, தளபதி கேரக்டரில் அப்பா விஜய் வருகிறார். அவருக்கு நித்யா மேனன் ஜோடி. மற்ற இரண்டு விஜய்யைப்  பற்றி தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 12 வகையான மேஜிக்குகளை, தகுந்த பயிற்சியாளர் மூலம் கற்றுக்கொண்டு  நடித்தார் விஜய். மேஜிக் காட்சிகள் அனைத்தும் நிஜமானவை. கிராபிக்சைப் பயன்படுத்தவில்லை. பஞ்ச் வசனங்கள் என்று  தனியாக இருக்காது.
 
படத்தில் மூன்று ஹீரோயின்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா போன்றோரின் கேரக்டர்களும் பேசப்படும். விஜய் ரசிகர்களுக்கு இது மெர்சல் தீபாவளியாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments