Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா படத்தில் சமந்தா இருக்கிறாரா இல்லையா? மீண்டும் எழுந்த குழப்பம்!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (11:26 IST)
விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் சமந்தா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே. அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. படத்தின் படப்பிடிப்பு  ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’படத்தில் இருந்து சமந்தா திடீரென விலகிவிட்டதாக சொல்லப்பட்டது.  அதற்கு காரணம் படத்தில் தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்று அவர் எண்ணியதே காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதை மறுத்த படக்குழு அவர் நடிப்பது உறுதி என சொல்லி வந்த நிலையில் இப்போது மீண்டும் சமந்தா படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சமந்தா அந்த படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments