Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

Advertiesment
கமல்ஹாசன்

Mahendran

, செவ்வாய், 3 ஜூன் 2025 (10:19 IST)
கமலஹாசனின் ‘தக்லைஃப் திரைப்படத்தை திரையிட மாட்டோம் என ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கூறிய நிலையில், கமல் மன்னிப்பு கேட்டாலும் அந்த படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக திரைப்பட சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து கர்நாடக திரைப்பட சம்மேளனம் தலைவர் நரசிம்மலு கூறிய போது, “நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன்,” என்று கமல் கூறுகிறார். ஆனால், “அவர் மன்னிப்பு கேட்டாலும் படத்தை வெளியிட அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை,” என்று தெரிவித்தார்.
 
இந்த நிலையில், கமல்ஹாசன் இது குறித்து வழக்கு ஒன்றை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ‘தக்லைஃப் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும், அந்த திரைப்படம்  வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கர்நாடகத்தில் ‘தக்லைஃப் படம் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளராக கால்பதிக்கும் ரவி மோகன்… எஸ் ஜே சூர்யாவோடு முதல்முறையாகக் கூட்டணி!