Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழம்பெரும்பாடலாசிரியரும் கவிஞருமான நாராயண ரெட்டி மரணம்

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (13:27 IST)
தெலுங்கு சினிமாவின் பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான நாராயண ரெட்டி உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு  வயது 85. இவர் மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் நடித்த குலேபகாவலி படத்தின் மூலம் பாடலாசிரியராக  அறிமுகமானார்.

 
1977ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, 1992ம் ஆண்டு பத்ம பூஷண் விருது, ‘விஸ்வம்பரா’ என்ற நூலுக்காக 1988ம் ஆண்டில் ஞானபீட  விருது பெற்றார். 1997ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.தெலுங்கு மொழியின் மீது பற்று கொண்ட நாராயண ரெட்டி, திரைப்படப் பாடல்கள், இலக்கியம், கவிதைகள் ஆகியவற்றிலும் தனி முத்திரை பதித்தார்.
 
நேற்று காலமான இவரின் இறுதி சடங்குகள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பிறகு நாளை நடைபெறுகிறது. தெலுங்கு சினிமாவின் பிரபலங்களும், ஆளுநர், முதல்வர் அமைச்சர்கள், நடிகர்கள் என அனைவரும் அவரின் மறைவிற்கு இரங்கல்  தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ளிஷே இல்லாத ஸ்போர்ட்ஸ் ட்ராமா… லப்பர் பந்து படத்தை பாராட்டிய அஸ்வின்!

சிங்காநல்லூர் சிக்னல் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்… இயக்குனரால் கடுப்பான பிரபுதேவா!

யுவன் ஷங்கர் ராஜாவிடம் இருந்து விலகுகிறாரா இயக்குனர் ராம்?... புது இசையமைப்பாளரோடு கூட்டணி!

விஷ்ணு விஷால் படத்தில் இருந்து வெளியேறினாரா இயக்குனர் கோகுல்?

கங்குவா படத்திலும் வேள்பாரி காட்சிகளா?... ஷங்கரின் அப்செட்டுக்குக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments