Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசன் கூறிய ஒரே ஒரு வார்த்தையால் கதறியழுத மதுமிதா!

Advertiesment
பிக்பாஸ்
, ஞாயிறு, 7 ஜூலை 2019 (07:59 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் மதுமிதாவை வெளியேற்ற விருப்பப்பட்ட நிலையில் மக்கள் தீர்ப்பை கமல் கூறியபோது மதுமிதா கதறி அழுத காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது
 
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வீட்டில் இருந்து யார் வெளியேறினால் நன்றாக இருக்கும் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியபோது வனிதா, ரேஷ்மா, மோகன் வைத்யா, ஷெரின், சாக்சி, சாண்டி, கவின், மீராமிதுன், ஆகியோர் மதுமிதாவையும் முகின், அபிராமி, தர்ஷன், சேரன், லாஸ்லியா வெளியேற்ற பரிந்துரை செய்தனர். மதுமிதா கவினையும், பாத்திமாபாபு, சரவணன் ஆகிய இருவரும் தங்களையே தேர்வு செய்து கொண்டனர். 
 
பிக்பாஸ்
இந்த மொத்தம் பிக்பாஸ் வீட்டில் உள்ள 16 பேர்களில் பாதி பேர் அதாவது எட்டு பேர் மதுவை வெளியேற்ற வேண்டும் என வாக்களித்தனர். ஆனால் மக்கள் கொடுத்த தீர்ப்பின்படி மதுமிதா' சேஃப்' என்று கமல் கூறியதும் மதுமிதா கதறி அழுதார். அவர் தனது அழுகையை நிறுத்த ஒருசில நிமிடங்கள் ஆகியது. மேலும் மதுமிதாவை வெளியேற்ற வேண்டும் என்று ஓட்டளித்த எட்டுபேர்களின் முகங்களில் ஈயாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்வாண காட்சியின் போது 15 பேரை கணவராக உணர்ந்தேன் - அமலாபால்