Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ. 21.26 கோடியை 30% வட்டியுடன் வழங்க வேண்டும்: நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Advertiesment
Vishal

Mahendran

, வியாழன், 5 ஜூன் 2025 (12:18 IST)
லைக்கா நிறுவனத்திடம் நடிகர் விஷால் கடன் வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறுவனத்திலிருந்து வாங்கிய ரூ. 21.26 லட்சத்தை 30% வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தனது பட தயாரிப்பு நிறுவனத்திற்காக அன்புச்செழியனிடம் விஷால் கடன் பெற்றது தொடர்பான வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி, அன்புச்செழியனிடம் விஷால் கடன் பெற்றது தொடர்பான வழக்கில், நிறுவனத்திற்கு ரூ. 21.26லட்சம் மற்றும் 30% வட்டியுடன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நடிகர் விஷால் தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக அன்புச்செல்லையனிடம் ரூ. 21.26 லட்சம் கடன் பெற்றதாகவும், அதை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகையை திருப்பி செலுத்தும் வரை, விஷால் படம் தயாரிக்கும் படங்களின் உரிமைகள் லைக்கா நிறுவனத்துக்கே வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
 
ஆனால் அந்த ஒப்பந்தத்தை விஷால் மீறியதால், லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தான் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் ‘குபேரா’ படத்துடன் மோதும் அதர்வாவின் ‘DNA’!