Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா பயந்துவிட்டார்…நீங்கள்தான் ஆறுதல்…நடிகர் உருக்கம்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (23:58 IST)
தனக்கு வந்த மிரட்டல்கள் பார்த்து தனது அம்மா பயந்துவிட்டதாக சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளதாகவும் இதனால் உயிர்பலிகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியானது.

இந்நிலையில், உபி., மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகள் இல்லை என்றும் ஆக்ஸிஜன் தடுப்பாடு என்று கூறினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் ; அவர்களின் சொத்துகள் பறிமுகம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் எச்சரித்திருந்தார்.

இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,. பொய் சொன்னால் ஓங்கு அறைவேன் என தெரிவித்தார். இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது

இந்நிலையில், நடிகர் சித்தார்த்திற்கு பாஜகவிடம் இருந்து மிரட்டல் வருவதாக அவர் டுவீட் செய்தார். இதற்கு பாஜகவின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அதில், தமிழக பாஜக ஐடி பிரிவினர் என் தொலைப்பேசி எண்ணைக் கசியவிட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் எனக்கு என் குடும்பத்தினருக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட் அச்சுறுத்தல்களும், பாலியல் ரீதியான மிரட்டல்களும் வந்துள்ளன. அனைத்து எண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதை நான் காவல்துறையில் ஒப்படைக்கவுள்ளேன். நான் வாய் மூடி இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், தன் வீட்டிற்கு வந்த மிரட்டல்களைப் பார்த்து என் அம்மா மிகவும் பயந்துவிட்டார். அவருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அதனால் ரசிகர்களாகிய உங்கள் டிவீட்களை அவர்களிடம் காட்டி, படித்துக் காட்டினேன்.  என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் எனது நன்றி. உங்கள் ஒவ்வொரின் வார்த்தைகளும் மதிப்பானது என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்