Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகைப்படம் வேண்டாம், கடவுளைக் காணவே வந்தேன்; ரஜினியை மிரள வைத்த ரசிகர்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (13:21 IST)
நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று முதல் ஒரு வார காலத்திற்கு தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் முதல்கட்டமாக கடந்த மே மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் வரை தனது ரசிகர்களை சந்தித்தார். இதனையடுத்து இரண்டாவது கட்டமாக நடக்கும் இந்த சந்திப்பு நேற்று முதல் வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. ரஜினியை இன்று சந்திக்க வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் என்பவர், அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ளாமல், ரஜினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் போட்டோ எடுத்துட்டு கெளம்பு என்று அவரை பார்த்து கூச்சலிட்டனர். அதற்கு அவரோ ’கடவுளை அருகில் சந்தித்ததே போதும்’, புகைப்படம் வேண்டாம் என்றார். ரஜினியிடம் ஆசி வாங்கிய பின் அவர் அங்கிருந்து சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்