Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமாவுக்கு வர விரும்பிய பலரை நான் தடுத்திருக்கிறேன்… பா ரஞ்சித்!

சினிமாவுக்கு வர விரும்பிய பலரை நான் தடுத்திருக்கிறேன்… பா ரஞ்சித்!
, வியாழன், 17 பிப்ரவரி 2022 (09:58 IST)
இயக்குனரும் தயாரிப்பாளருமான பா ரஞ்சித் குதிரைவால் என்ற படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்குனராக மட்டும் இல்லாமல் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக பல தரமான படைப்புகளை தயாரித்து வருகிறார்.அந்த வகையில் இப்போது கலையரசன் நடித்துள்ள குதிரைவால் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக பங்காற்றியுள்ளார். இந்த படம் மேஜிக்கல் ரியலிசம் எனும் வகைமைக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவுக்கு இந்த வகைமை முழுவதும் புதிதாகும்.

படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பா ரஞ்சித் ‘சினிமா லாபகரமான தொழில்தான். ஆனால் எல்லோருக்கும் அது லாபம் தருவதில்லை. இதை சினிமாவுக்கு வரவேண்டுமென நினைக்கும் அனைவரிடமும் நான் சொல்லி இருக்கிறேன். சினிமாவுக்கு வர நினைத்த பலரை நான் தடுத்திருக்கிறேன். சினிமாவுக்கு வர ஆசைபடுபவர்களிடம் முதலில் அதன் பாதகங்களைக் கூறுவேன். அதை கேட்டும் வர ஆசைப்படுபவர்களிடம்தான் நான் சாதகங்களைக் கூறுவேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி 169 படத்தின் கதாநாயகி யார்? நீளமாக போகும் லிஸ்ட்!