Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

Advertiesment
சூர்யா

vinoth

, திங்கள், 9 ஜூன் 2025 (08:28 IST)
சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் சார்பில் ‘பராசக்தி’ திரைப்படம் உருவாகி வருகிறது.  முதலில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு கடைசியாக இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. ‘பராசக்தி’ திரைப்படம் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தோடு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும்  என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறையின் சோதனையிட்ட நிலையில் அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் தயாரிக்கும் படங்களின் பணிகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. அதிலும் குறிப்பாக இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘பராசக்தி’ திரைப்படம் முடக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

ஆனால் படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா ‘பராசக்தி படத்துக்கு அமலாக்கதுறை சோதனையால் எந்த பாதிப்பும் இல்லை. சிவகார்த்திகேயன் தற்போது மதராஸி படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கையில் உள்ளார். அவர் வந்ததும் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும்” எனக் கூறியிருந்தார். அதன்படி தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் பல்லவிகளை பல இயக்குனர்கள் பயன்படுத்தியுள்ளனர்… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!