Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பட வெளியீடு: தயாரிப்பாளர் சங்கம் முக்கிய அறிக்கை

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (11:03 IST)
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 


 
"தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் 05.12.2018 அன்று நடைபெற்ற புதிய திரைப்படங்கள் வெளியீட்டு குழு கூட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.
 
அதில் வருகிற டிசம்பர் 14 ஆம் தேதி அன்று நிறைய திரையரங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அன்றைய தினம் சில திரைப்படங்கள் வரலாம் என்று பேசப்பட்டது. 
 
மேலும், ஒரே தேதியில் நிறைய திரைப்படங்கள் வெளிவருவதால் ஏற்படும் பிரச்னை குறித்தும், பாதிப்புகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், எந்த தயாரிப்பாளரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
இந்நிலையில், வருகிற டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 10 ஆம் தேதிகளில் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்கள் விடுமுறை தினத்தன்று தான் வெளிவர வேண்டும் என்றும், அவ்வாறு வெளிவந்தால் தங்களுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படாது என்றும் முடிவெடுத்து அவர்கள் விரும்பி கேட்டுக்கொண்டதன் பேரில், தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கண்ட கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு தேதிகளில் தயாரிப்பாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களது திரைப்படங்களை வெளியீட்டு கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments