Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியுடன் நடிப்பதை உறுதி செய்த பிரியா பவானி சங்கர்

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (13:32 IST)
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் பிரியா பவானி சங்கர். தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலமாக சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர்.

 
சின்னத்திரையில் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் மூலமாக அனைவரது மனதிலும் இடம் பெற்றார். மேயாத மான்  படத்திற்கு பிறகு இயக்குநர் பாண்டியராஜ் நடிகர் கார்த்தியை வைத்து எடுக்கும் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி  சங்கர் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்தன.
 
தற்போது இதனை உறுதிபடுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளார் பிரியா. நேற்று இப்பட பூஜையின்போது பிரியா வரவில்லை, இதனால் இவர் படத்தில் இருந்து வெளியேறிவிட்டாரா என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ரசிகர்களின் குழப்பத்தை  போக்க பிரியா தன்னுடைய டுவிட்டரில் கார்த்தி, பாண்டிராஜ் படத்தில் தான் நடிப்பதாகவும், சில காரணங்களால் பூஜைக்கு வர  முடியவில்லை என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments