Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணை இயக்குநரை கல்யாணம் செய்து கொள்ளும் ‘ரங்கூன்’ இயக்குநர்

Webdunia
திங்கள், 14 மே 2018 (16:07 IST)
‘ரங்கூன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தன்னுடன் பணியாற்றிய இணைஇயக்குநரையே கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறார்.
 
‘ரங்கூன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி.கெளதம் கார்த்திக் நடித்த இந்தப் படத்தில், இணை இயக்குநராகப் பணியாற்றியவர் ஜஸ்வினி. இவர் ஏற்கெனவே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அசோஸியேட்டாகப் பணியாற்றியவர். இருவருக்கும் வருகிற 25ஆம் தேதி சென்னையில் கல்யாணம் நடைபெற இருக்கிறது.
 
கடந்த 2009ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘உங்களில் யார்அடுத்த பிரபுதேவா?’. இந்த நிகழ்ச்சியின் இயக்குநரும் ராஜ்குமார் பெரியசாமி தான். இந்த நிகழ்ச்சிக்கு இண்டர்ன்ஷிப்புக்காக வந்திருக்கிறார் ஜஸ்வினி. எனவே, கடந்த 9 வருடங்களாகத் தொடர்ந்த நட்பு, தற்போது திருமணத்தில் முடிய இருக்கிறது.
 
ஜஸ்வினிக்கும் இயக்குநராக வேண்டும் என்பது ஆசையாம். ஒரே குடும்பத்தில் இரண்டு இயக்குநர்கள்… வாழ்த்துகள்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments