Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனராகும் ராஜ்கிரணின் மகன்… அதுவும் அவர் படத்தின் இரண்டாம் பாகம்தானாம்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:53 IST)
நடிகர் ராஜ்கிரணின் மகன் அவர் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை அமைத்து இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்த ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து 2000 வரை கதாநாயகனாக நடித்த அவர் பின்னர் நந்தா திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். இப்போது வரை தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பெயரை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரின் முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக முன்னர் அறிவித்திருந்தார். இப்போது அது குறித்த முக்கியமானத் தகவலை வெளியிட்டுள்ளார். அவருடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவதுபிறந்த நாள்...

"என் ராசாவின் மனசிலே"  இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்... அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்...’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments