Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலா பால் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு - கிரண்பேடி

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (12:25 IST)
அமலா பால் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

 



கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக பென்ஸ் கார் வாங்கிய அமலா பால், அதை கேரளாவில் பதிவு செய்தால் 20 லட்சம் வரியாகக் கட்ட வேண்டும் என்பதால், இரண்டு லட்சம் மட்டும் செலவு செய்து புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். புதுச்சேரியில் வசிப்பவர்கள் மட்டுமே அங்கு பதிவுசெய்ய முடியும் என்பதால், இன்னொருவர் பெயரில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்துள்ளார் அமலா பால். இந்த விஷயம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இதுகுறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்யுமாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், இதேபோல் வேறு யாரெல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்று விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments