Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“படத்தின் ரிலீஸ் தேதி இயக்குநர்கள் கையில் இல்லை” – செல்வராகவன்

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (18:14 IST)
படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என இயக்குநர்கள் முடிவு செய்ய முடியாது என செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
 

 
 
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரெஜினா மற்றும் நந்திதா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத்  தயாரித்துள்ளனர். இந்தப் படம் ரிலீஸுக்குத் தயாராகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. ஆனாலும் இன்னும் ரிலீஸான  பாட்டைக் காணோம்.
 
இந்நிலையில், ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் செல்வராகவன். “உங்களுடைய விசாரிப்புகள் என் நெஞ்சைத்  தொட்டுவிட்டன. மிக விரைவில் படம் வெளிவரும். இந்தப் படம் தயாரிப்பாளர் மதன் படம். எப்போது சிறந்ததாகக் கொடுக்க  வேண்டும் என அவருக்குத் தெரியும். படத்தின் ரிலீஸ் தேதி இயக்குநர்கள் கையில் இல்லை” என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் செல்வராகவன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments