Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘சாமி ஸ்கொயர்’ விக்ரமுக்கு மூன்று வில்லன்கள்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (11:54 IST)
விக்ரம் நடித்துவரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில், அவருக்கு வில்லன்களாக மூன்று பேர் நடித்துள்ளனர்.
ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகி வருகிறது. விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு  இசையமைக்கிறார். ‘இருமுகன்’ படத்தைத் தயாரித்த ஷிபு தமீம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
‘சாமி’ படத்தில் பெருமாள் பிச்சை என்ற வில்லன் கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் நடித்திருப்பார். இந்தப் படம், முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், அவர் இறந்து 29 வருடங்கள் கழித்து நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. இறந்துபோன பெருமாள் பிச்சைக்கு, சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமல்ல, பெருமாள் பிச்சைக்கு மூன்று மகன்கள் என்றும், தங்கள் தந்தை இறப்புக்காக மூன்று பேரும் சேர்ந்து விக்ரமைப் பழிவாங்குவது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. பாபி சிம்ஹா, ஓ.ஏ.கே.சுந்தர் மற்றும் ஜான் விஜய் மூன்று பேரும்தான்  அந்த மகன்கள். இதில், பாபி சிம்ஹாவின் பெயர் ராவண பிச்சை என்று வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments