Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாளம், தெலுங்கை அடுத்து கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை: திடுக் புகார்..!

Mahendran
வியாழன், 19 செப்டம்பர் 2024 (14:03 IST)
மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகள் உள்ளன என்பது ஹேமா கமிஷன் அறிக்கையால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகளில் ஒருசில நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லைகள் நிலவுவதாக நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னட மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கன்னட திரைப்பட துறையில் பெண் கலைஞர்களுக்கு தனித்துவமான பாதுகாப்பு அமைப்புகள் இல்லை என்பதையும், தனது அறக்கட்டளையின் மூலம் ஒரு சுதந்திரமான அமைப்பை உருவாக்குவோம் என்றும் சஞ்சனா கூறியுள்ளார். 
 
மேலும், திரைத்துறையில் புதிய முகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, "சான்டல்வுட் வுமன் ஆர்டிஸ்ட் அசோசியேசன்" என்ற அமைப்பை உருவாக்க முனைவதாகவும், கன்னட திரைத்துறையில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் - காலத்தின் கட்டாயம்!

சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதிர்பார்த்த அதே தேதி தான்..!

வரலாற்றில் இன்று… இந்திய கிரிக்கெட் ரசிகர்களை யுவ்ராஜ் சிங் மெய்சிலிர்க்க வைத்த நாள் !

ஹெச் வினோத்தைக் கொலை செய்துவிட்டு விஜய்யின் கடைசி படத்தை இயக்க வேண்டும்- பார்த்திபனின் விபரீத ஆசை!

நானே மொதல்ல விமல் ரசிகன்தான்… மேடையில் புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்