Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்: எதுக்கு!!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (13:00 IST)
கமெடியனாக தனது பயணத்தை துவங்கிய சந்தானம் அடுத்து ஜோரோவாகி அதோடு தயாரிப்பாளராவும் உருவெடுத்தார். அடுத்து இயக்குனராகவும் உள்ளாராம்.


 
 
முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் சந்தானத்தின் காமெடி இல்லாமல் இருக்காது என்பது ஒரு காலத்தில் இருந்த பேச்சு. ஆனால், தற்போது காமெடி பக்கம் தலைகாட்ட தயங்குகிறார் ஹீரோ சந்தானம்.
 
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கினார்.
 
அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஹிட் கொடுக்கவில்லை. இதனால் ஹீரோ வாய்ப்பையும் இழந்து காமெடியன் வாய்பையும் இழந்து தவித்து வருகிறார்.
 
தற்போது சர்வர் சுந்தரம் ரிலீஸூக்காக காத்து கொண்டிருக்கிறார் சந்தானம். இதை தொடர்ந்து சக்கப்போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்கள் வரிசையாக கிடப்பில் உள்ளன.
 
இந்நிலையில் சந்தானம் இது குறித்து கூறியதாவது, அடுத்து உங்களது எதிர்காலம் என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். வருங்காலங்களில் என்னை ஒரு இயக்குனராக பார்க்கலாம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments