Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’46 வருடங்கள் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்.பி.பி’’- ரஜினிகாந்த் புகழாரம்

’’46 வருடங்கள் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்.பி.பி’’- ரஜினிகாந்த் புகழாரம்
, திங்கள், 4 அக்டோபர் 2021 (18:27 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் முதல் சிங்கில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் ரஜினி இப்பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கலாநிதிமாறனின் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள  ’அண்ணாத்த’ பட ஃபர்ஸ்ட் சிங்கிலை வெளியிட்டுள்ளது.  

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் ’’அண்ணாத்த’’ பட ஃபர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ் !