Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டப்பிங் படங்களை விட தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்… சீனு ராமசாமி!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (09:52 IST)
இயக்குனர் சீனுராமசாமி மாற்று மொழிப்படங்களின் ரிலீஸை தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

இப்போது தமிழ் படங்களுக்கு இணையான எண்ணிக்கையில் மாற்று மொழிப் படங்களும் தமிழகத்தில் ரிலீஸாக ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் ரிலிஸான புஷ்பா திரைப்படம் கிட்டத்தட்ட தமிழ் படங்களுக்கு இணையான திரையரங்கை ஆக்கிரமித்தது. அதே போல அடுத்தடுத்து வரும் ஆர் ஆர் ஆர் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்களுக்கும் பெரிய அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளன. இது மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களும் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் ரிலிஸ் ஆகின்றன.

இதனால் சிறு மற்றும் குறு பட்ஜெட் தமிழ்ப் படங்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் சீனு ராமசாமி ‘கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அந்த மொழிப் படங்களுக்கே முன்னுரிமைக் கொடுக்கின்றனர். அதுபோல தமிழ்நாட்டிலும் தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டப்பிங் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கான திரையிடல் அட்டவணையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments