Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாட்டு திரைப்படவிழாவில் விருது வென்ற துல்கர் சல்மானின் திரைப்படம்!

வெளிநாட்டு திரைப்படவிழாவில் விருது வென்ற துல்கர் சல்மானின் திரைப்படம்!
, புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:26 IST)
துல்கர் சல்மான் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மூலமாக பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால், இப்போது அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராகியுள்ளார். அதன் பின்னர் சமூகவலைதளங்களில் அவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் படம் ரிலீஸாகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இப்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த இந்திய திரைப்படங்களுக்கான திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை சீதாராமம் திரைப்படம் வென்றுள்ளது.

சமீபத்தில் சமூகவலைதளப் பக்கத்தில் ரசிகர்களோடு உரையாடிய மிருனாளிடம் “சீதாராமம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா?” என்ற கேள்வியை எழுப்பினார் ரசிகர் ஒருவர்.  அதற்கு பதிலளித்த மிருனாள் தாக்கூர் “எனக்கு அதுபற்றி தெரியவில்லை. ஆனால் அப்படி இரண்டாம் பாகம் உருவானால் அதில் நானும் இருக்க விரும்புகிறேன்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலாவின் வணங்கான் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் அப்டேட்!