Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருகதாஸ் படத்துக்காக நடிப்புக்கு தனி டிரைனர் வைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்!

முருகதாஸ் படத்துக்காக நடிப்புக்கு தனி டிரைனர் வைத்துக்கொண்ட சிவகார்த்திகேயன்!

vinoth

, வியாழன், 7 மார்ச் 2024 (07:55 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் சில நாட்கள் தொடங்கியது. அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது வி ஐ டி கல்லூரியில் நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தில் தன்னுடைய நடிப்பு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிப்புக்காக தனிப் பயிற்சியாளர் ஒருவரை நியமித்துள்ளாராம் சிவகார்த்திகேயன். ஒவ்வொரு காட்சிக்கும் முன்பு அவரிடம் ஆலோசனை பெற்று நடித்து வருகிறாராம். முன்னதாக விஜய் சேதுபதியும் தன்னுடைய படங்களில் நடிப்புப் பயிற்சியாளராக பூஜா தேவாரியா என்பவரை நியமித்து இருந்தார் என்பது குறிப்பிடத்த்ககது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லா கட்ட முடிவு செய்த சமந்தா… பாலிவுட்டில் தயாரிப்பாளராக முயற்சி!




X
X
X
X