Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

Advertiesment
Pushpa 2 Original incidents
, வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (10:59 IST)
நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பாக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்த புஷ்பா 2’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்துள்ளது. இந்திய அளவில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தப் படமாக அமைந்தது.

புஷ்பா 2 உருவாக்கத்தின் போதே அல்லு அர்ஜுனுக்கும் சுகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து ஷூட்டிங் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் இந்த படத்தில் 40 சதவீதக் காட்சிகளைத் தான் இயக்கவில்லை என சுகுமார் அறிவித்தார். அவருடைய இணை இயக்குனர்தான் இயக்கினார் என அறிவித்தார். அடுத்து சுகுமார் ஷாருக் கானை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் தமிழில் உள்ள எந்த நடிகரை வைத்து படம் இயக்க ஆசை என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அதில் அஜித்தை முதலில் கூறிய அவர் அடுத்து சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரையும் இயக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!