Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா!

மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா!
, வெள்ளி, 5 நவம்பர் 2021 (11:27 IST)
இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 3 படத்துக்குப் பிறகு ஜீவாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 படத்தின் வெற்றி அவரின் அடுத்த படத்தை உடனடியாக தொடங்க வைத்துள்ளது. அடுத்த படத்தில் அவர் நடிகர் ஜீவாவை கதாநாயகனாக்கியுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கலகலப்பு 2 படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷிகண்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைலண்ட் ஆக சம்பளத்தை உயர்த்திய சமந்தா!