Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் பிரமாண்ட ’கட் அவுட் ’மீண்டும் திறப்பு : ரசிகர்கள் ஆரவாரம்...

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (18:52 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து இன்று திரைக்கு வந்துள்ள  படம் என்.ஜி.கே. இதில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நாயகிகளாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் வகையில் சூர்யாவின் ரசிகர்கள் 215 அடி உயரமான ஒரு கட் அவுட்டை திருத்தணி அருகே திருவள்ளூர்- சென்னை நெடுஞ்சாலை பகுதியில் அமைத்தார்கள். இதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இதுவரை எந்த நடிகருக்கும் இவ்வளவு உயரமான கட் அவுட் வைத்ததில்லை. இந்த கட் அவுட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது.
 
இந்நிலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட இந்த கட் அவுட்டை அகற்றுமாறு ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் கட் அவுட் அகற்றப்பட்டது. பல லட்சம் செலவு செய்து வைக்கப்பட்ட கட் அவுட் ஒரே நாளில் அகற்றப்பட்டது சூர்யா ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.
 
இந்நிலையில் திருத்தணி புறவழிச்சாலையில் சூர்யா ரசிகர்கள் வைத்திருந்த 215 கட் அவுட்  மீண்டும் திறக்கப்பட்டது. இன்று சூர்யா நடிப்பில் நடித்த என். ஜி .கே படம் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் சிறப்பு அனுமதி பெற்று இந்த பிரமாண்ட கட் அவுட்டை திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சூர்யா ரசிகர்கள் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்துவருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்.. நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments